ரஜினியுடன் இணைய இருந்தாரா பாகுபலி ‘ராஜமௌலி’.?! கதை கூட ஓகே.! ஆனால்.!?

Published by
மணிகண்டன்

ராஜமௌலியின் அப்பா விஜேந்திர பிரசாத் ரஜினியிடம் கதை கூறினாராம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையோடு நின்று விட்டதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் அவரது ரசிகர்களையும், குடும்ப செண்டிமெண்ட் கொண்டு குடும்பங்களையும் கவர்ந்ததே தவிர அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அவரது பிளாக் பஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் ரஜினிகாந்த்.

இல்லையென்றால் சென்ற 12.12.2021 ரஜினியின் பிறந்தநாளன்றே ரஜினியின் 169வது திரைப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கும். ஆனால், இன்னும் கதை இறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், பாகுபலி. RRR பட பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் ஒரு மேடையில், ரஜினி சாருடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என கூறியிருந்தார். அதற்கான அடித்தளமும் அமைந்தது என்கின்றனர் சினிமா வட்டாரவாசிகள்.

அதாவது, ராஜமௌலியின் அப்பாவான விஜேந்திர பிரசாத் ( ராஜமௌலியின் படங்களுக்கு பெரும்பாலும் கதை எழுதுபவர் இவர் தான் ) ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார் அது ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த சந்திப்பு பற்றி ராஜமௌலியிடம் அவரது அப்பா கூறினாராம்.

ஆனால், ராஜமௌலி சற்று தங்கியதாக கூறப்படுகிறது. அதாவது ராஜமௌலியின் படங்களில் இளம் நாயகர்கள் தான் ஹீரோக்கள். அவர்களால் தான் சண்டை ஆக்சன் காட்சிகளில் எந்தவித சமரசமும் இன்றி ராஜமௌலியால் வேலை வாங்க முடியும்.

ஆனால் ரஜினி போன்ற அனுபவசாலி நடிகரை வைத்து சண்டைக்காட்சிகளில் சமரசம் செய்ய அவருக்கு மனமில்லையாம். மேலும், ரஜினி தற்போது விரைவில் படத்தை முடிக்கும் இயக்குனர்களை நாடி வருகிறாராம். ராஜமௌலியிடம் சென்றால் வருடக்கணக்கில் ஷூட்டிங்கை இழுத்துவிடுவார்கள். அதுவும் பிரச்சனை என்பதால், ரஜினிகாந்த் – ராஜமௌலி திரைப்படம் பேச்சளவிலேயே நின்றுவிட்டதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

16 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago