குறி வச்ச தலைவர் ரஜினிகாந்த்! கொண்டாட்டத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு?

கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

rajinikanth venkat prabhu

சென்னை : கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கெட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது டிவிஸ்டாக அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதாகச் சூடான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, கோட் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியது தான்.

படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குக் கால் செய்து படம் பற்றிப் பல விஷயங்களைப் பேசி பாராட்டி இருந்தார். இதனை வெங்கட் பிரபுவே நன்றி தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார். இந்த சூழலில், படத்தைப் பாராட்டி விட்டு ரஜினிகாந்த் வெங்கட் பிரபுவிடம் கதை ஒன்றையும் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, வெங்கட் பிரபு சொன்ன கதை ரஜினிகாந்த்திற்குப் பிடித்த காரணத்தால் அவருடன் படம் செய்வதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தீயான தகவல் பரவி வருகிறது. அது மட்டுமின்றி, இவர்கள் இருவரும் இணையவுள்ள இந்த படத்தினை லைக்கா நிறுவனம் பெரிய பட்ஜெட் செலவில் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இருப்பினும், இந்த தகவல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இது வதந்தியாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இப்படியான தகவல் மேலும் வைரலாவது முக்கிய காரணம் சமீபத்தில் ரகசியமாக வெங்கட் பிரபு கோவில்களுக்குச் சென்றது தான். ரஜினி படம் கிடைத்த குஷியில் தான் அவர் கோவிலுக்குச் சென்றுள்ளதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.

இருப்பினும், உண்மை என்னவென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டும் தான் தெரியும். ஒரு வேலை வெங்கட் பிரபு ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்குவதாகப் பரவும் தகவல் உண்மை என்றால் கண்டிப்பாக விரைவாகவே அதற்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்