Categories: சினிமா

விஜயகாந்த் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்! ரஜினிகாந்த் பேச்சு!

Published by
பால முருகன்

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.  அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி  வருகிறார்கள்.

குறிப்பாக நேரில் சென்று  ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்தார்.

விஜயகாந்துக்கு தற்போது வரை அஞ்சலி செலுத்தாத நடிகர் வடிவேலு.!

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ” என்னுடைய அன்பு நண்பர் விஜயகாந்த் மறைவு எனக்கு மிகவும் வேதனை தருகிறது. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அவர் அடிக்கடி கோபப்படுவார். ஆனால்,  யாருக்கும் அவர் மேல கோபம் வராது. ஏனென்றால் விஜயகாந்த் கோபத்துக்கு பின்னால ஒரு நியாயமான காரணம் இருக்கும். சுயநலம் இருக்காது. ஒரு அன்பு இருக்கும்.

நான் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது அவர் பண்ண அந்த உதவி எல்லாம் நான் என்றுமே மறக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு அந்த சமயம் எனக்கு அவர் பல உதவிகளை செய்து இருக்கிறார். ஒரு முறை அவருடன்  பழகினால் நட்புக்கு இலக்கணமாக கடைசிவரை திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் என்ற பெயர் அவருக்கு சரியான ஒரு பெயர். விஜயகாந்த்க்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதுவாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த். ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” எனவும் ரஜினிகாந்த் கண்ணீருடன் பேசியுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago