அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிக்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை நடிகை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து நடிகர் ஜெகதீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெகதீசனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்
தற்போது, புஷ்பா பட துணை நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, புஞ்சகுட்டா காவல்துறை விசாரணையில், உயிரிழந்த பெண்ணை ஜெகதீஷ் ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.
அந்த புகைப்படத்தை வைத்து ஜெகதீஷ் அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும், மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அந்த பெண் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவந்துள்ளது. மேலும், இந்த வழக்கு பற்றிய கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கின்றது.
மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!
நடிகர் ஜெகதீஷ் கடைசியாக மைத்ரி மூவி மேக்கர்ஸின் சிறிய பட்ஜெட் நாடகமான சத்திகானி ரெண்டு யேகராலுவில் நடித்தார். அவர் அடுத்ததாக நிதின் மற்றும் ஸ்ரீலீலாவின் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் கிராமிய நாடகமான அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்டில் நடித்துள்ளார்.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…