தமிழ் சினிமாவில் ‘என்னமா கண்ணு’ திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் அறிமுகமானவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை . இவர் பிரபல முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம். ரத்தினத்திடம் உதவியாளராக பணியாற்றிய பிறகு ‘எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து வந்தார்.
‘என்னமா கண்ணு’ படத்திற்கு பிறகு இவர் விவரமான ஆளு,பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்து இருந்தார். இதில் அவர் தயாரித்த கஜேந்திரா திரைப்படம் சரியாக போகாத காரணத்தால் பண ரீதியாக தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்த வி.ஏ.துரை தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்துள்ளார்.
பிறகு, அவருடைய நண்பர் ஒருவர் சாலிகிராமத்தில் வீடு ஒன்றை எடுத்து வடைக்கு பிடித்து கொடுத்துள்ளார். அங்கு தான் வி.ஏ.துரை வசித்து வந்தார். பின் வி.ஏ.துரை நீரிழிவு நோயினால் மிகவும் பாதிக்கப்பட உடனடியாக அவருடைய நண்பர் இந்த தகவலை பிரபல இயக்குனரான எஸ்.பி.முத்துராமனுக்கு தெரியபடுத்தினார்.
இதனையடுத்து, எஸ்.பி.முத்துராமனும் தன்னால் முடிந்த உதவியை செய்துவிட்டு மற்றவர்கள் உதவி செய்யவேண்டும் எனவும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து வி.ஏ.துறை ” நான் நீரிழிவு நோயால் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மருத்துவ செலவுக்கு எனக்கு பண உதவி செய்யுங்கள்” என பிரபலங்களிடம் உதவியும் கேட்டிருந்தார். அந்த வீடியோவை அவருடைய நண்பர் வெளியீட்டு இருந்தார்.
அதன் பிறகு வீடியோவை பார்த்த ரஜினி, சூர்யா, விக்ரம், கருணாஸ், உள்ளிட்ட பல பிரபலங்களும் அவருக்கு உதவி செய்து இருந்தார்கள். உதவி கிடைத்தவுடன் நீரிழிவு நோயால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். பின், அவருடைய கால் அகற்றப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவால் வி.ஏ.துறை காலமானார். இவருக்கு வயது 59. இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு விஜயலட்சுமி, லட்சுமி என இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவிக்கு 2 மகள்களும், 2-வது மனைவிக்கு 1 மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…