gnanavel raja ameer [file image]
பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் கடந்த 17-ஆண்டுகளாக பேசிக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.
அந்த பேட்டியில் பேசிய ஞானவேல் ” பருத்திவீரன் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அமீர் அதிகமாக கணக்கு காட்டி என்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும். ஆனால், அவர் அதனை திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். பிறகு இது பற்றி அமீரும் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.
ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!
அந்த அறிக்கையில் அமீர் ” ஞானவேல் ராஜா சொல்லும் விஷயத்தில் கொஞ்சம் கூட உண்மை என்பது இல்லை அவர் என்னுடைய பெயரை கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி பேசிகொன்டு வருகிறார்” என கூறியிருந்தார். அமீர் அறிக்கையை வெளியிட்ட பிறகு இவருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாரதி ராஜா என அனைவரும் ஞானவேல் பேச்சுக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியீட்டினர்.
இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில், கரு.பழனியப்பன், பாரதி ராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் அமீரிடம் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து, தான் பேசியது அமீரை காயப்படுத்தி இருந்தது என்றால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…