“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

பிரியங்கா அக்கா யாரையும் கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆள் இல்லை என அவருக்கு ஆதரவாக அமீர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

amir about priyanka

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். இந்த அளவுக்கு விமர்சனங்களைப் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூட எதிர்கொண்டு இருக்கமாட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த பிரச்சினையில் பிரியங்கா வந்த பிறகு தான் பல தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பிரியங்கா தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது போலப் பேச்சுக்கள் எழுந்தது. அது மட்டுமின்றி, பிரியங்காவுக்கு ஒரு ஆள் பிடிக்கவில்லை என்றால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாது என நினைப்பார் எனவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள்.

ஒரு பக்கம் இந்த விமர்சனங்கள் பிரியங்கா மீது எழுந்தாலும் மற்றொரு பக்கம் அவருக்கு நெருக்கமாகப் பழகி வரும் அவரை பற்றி நன்றாகத் தெரிந்த சின்னத்திரை பிரபலங்கள் ஆதராகவும் பேசி வருகிறார்கள். குறிப்பாக, குரேஷி, சுனிதா, பாவனி ஆகியோர் பிரியங்காவுக்கு ஆதரக பேசிய இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து பிரியங்காவுடன் தம்பி போலப் பழகி வரும் அமீர் ஆதரகவா பேசியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமீர் பேசும்போது ” பிரியங்கா அக்கா பக்கம் யாரெல்லாம் நிற்கிறார்களோ அவரால் எல்லாரும் அவரை போலவே தான் இருப்பார்கள். ஏனென்றால், பிரியங்கா அக்காவைப் பற்றி அந்த அளவுக்கு அவர்களுக்குத் தெரியும். எனவே, நம்மளைப் போல இப்படி ஒருவர் இருக்கிறாரே என்று தான் அவருடைய பக்கம் நிற்கிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ” பிரியங்கா அக்கா யாரையும் கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆள் இல்லை எனவும், அவர் தன்னிடம் வாய்ப்பு கேட்பவர்களை எப்படியாவது எந்த அடிமட்டத்திற்குச் சென்று யாரிடம் கேட்டால் வாய்ப்பு கிடைக்கும் என வாய்ப்பு தேடிக் கொடுக்கக்கூடிய நல்ல மனம் கொண்டவர்” எனவும் அமீர் பிரியங்கா உண்மையான குணம் இது தான் எனப் பேசியுள்ளார்.

மணிமேகலை பிரச்சனையில் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரை பற்றி சக போட்டியாளர்கள் மட்டம் தட்டிப் பேசிய வீடியோக்கள் வைரலாக பரவி வந்த காரணத்தாலும், அமீர் பிரியங்காவின் உண்மையான குணம் பற்றி மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக அவருக்கு ஆதரவாக அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

மேலும், குரேஷி சொன்னது போலத் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரச்சினை நடந்தது. பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை எனவும் அமீர் கூறியுள்ளார். பிரச்சினை தொடங்கியபோது மணிமேகலைக்கு ஆதரவு குவிந்த நிலையில், இப்போது நாளுக்கு நாள் பிரியங்காவுக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்