சினிமா

விக்ரம் படத்தில் நடிக்கவிருந்த பிரியா ஆனந்த்! எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

Published by
பால முருகன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மிகவும் பிரபலமானார்கள் என்றே கூறலாம்.

குறிப்பாக கமல்ஹாசனுக்கு மருமகளாக நடித்த நடிகை சுவாதிஸ்தா கிருஷ்ணன், நடிகை மாயா கிருஷ்ணன் ஆகியோர் மிகவும் பிரபலமானார்கள். இதில் சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர் இல்லயாம். அவருக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடிக்கவிருந்ததாம்.

அவர் வேறு யாரும் இல்லை எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் தான். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். ஆனால், அந்த சமயம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் தான் நடிக்கவில்லை என்று பிரியா ஆனந்த் கூறினாராம். இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக பிரியா ஆனந்த் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை இப்படியான நேரத்தில் கமல்ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அவர் நடிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக விக்ரம் படத்தில் அவர் நடித்திருந்தால் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், விக்ரம் படத்தில் சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரங்களின் காட்சிகள் குறைவான நேரம்  மட்டுமே வரும் எனவே, இதன் காரணமாக கூட பிரியா ஆனந்த்  அந்த  கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும், பிரியா ஆனந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் அவர் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

28 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

2 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

2 hours ago

KKR vs GT : வெற்றி பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? குஜராத்திற்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…

2 hours ago

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

5 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

5 hours ago