தளபதிக்கு பிடித்த கதையை தயார் செய்து விரைவில் சந்திப்பேன்.! பிரபல இயக்குனர் உறுதி.!

Published by
பால முருகன்

விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இய்குனார் பேரரசு மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறார். அதற்காக இரண்டு அருமையான கதைகளை தயார் செய்துவிட்டு விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாக பேரரசு சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு சூப்பரான கதைகளை எடுத்துக்கொண்டு அவரை சந்தித்தேன். கதையை கேட்டு முடித்த பிறகு விஜய் சார் என்னிடம் இப்போது இதுபோன்ற கதை வேண்டாம். மக்கள்  ஆக்ஷன் படங்களை விரும்புகின்றனர்.

இந்த கதை நல்ல தான் இருக்கு. பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். ஆனாலும். நான் மீண்டும் அவருக்கு பிடித்த படி ஒரு சூப்பரான கதையை  தயார் செய்து மீண்டும் அவரைச் சந்தித்துக் கதை கூறுவேன்” என உறுதியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜியும் நடிகர் விஜயிடம் கதை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

16 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago