தனுஷ் நல்ல அப்பா, ஐஸ்வர்யா ரொம்ப மோசமான தாய்! சுசித்ரா பரபரப்பு பேட்டி!

Published by
பால முருகன்

சென்னை : தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பிரபல பாடகியான சுசித்ரா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி முன்னணி பாடகியாக இருப்பவர் சுசித்ரா. இவர் பிக் பாஸ் சீசன் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு இருந்தார். முன்னணி பாடகியாக வளம் வந்து கொண்டு இருந்த சமயத்திலே சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலன்களுடைய சீக்ரெட் புகைப்படங்களை வெளியீட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் பாடல்களை பாட  பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தான் பிக் பாஸ் 4 -வது சீசனிற்குள் நுழைந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து  விஷயத்தில் நான் தனுஷ் பக்கம் தான் நிற்பேன்.

அதற்காக தனுஷை எனக்கு பிடிக்கும் என்று அர்த்தம் இல்லை எனக்கு அவரை பிடிக்கவே பிடிக்காது. என்னை பொறுத்தவரை, ஐஸ்வர்யா தனுஷை ஏமாற்றி இருக்கிறார்.தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றி இருக்கிறார். விவாகரத்து செய்தி வெளிவந்த சமயத்தில் பயில்வான் ரங்கநாதன்  ஐஸ்வர்யாவை புகழ்ந்து தனுஷை மட்டம் தட்டி பேசினார்.

ஆனால், தனுஷ் அவருடைய குழந்தைகளுக்கு ஐஸ்வர்யாவை விட சிறந்த பெற்றோராக இருந்துள்ளார். ஐஸ்வர்யா ஒரு தாயாக இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போட்டுகொண்டு தன்னையே தான் ப்ரோமோஷன் செய்துகொண்டார். தனுஷ் எனக்கு ஜென்ம எதிரி எல்லாம் இல்லை. ஆனால் கார்த்திக் உடன் சேர்ந்து என்னுடைய கேரியரை நாசமாக்கிவிட்டார். அந்த கோபம் அவர் மீது எப்போதுமே இருக்கிறது.

ஆனால், விவாகரத்து விஷயத்தில் தனுஷ் பக்கம் நியாயம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஐஸ்வர்யா அவருடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இல்லை” என விமர்சித்து பேசியுள்ளார். இவர் இப்படி வெளிப்படையாக விமர்சித்து பேசி இருப்பது சினிமா துறையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

3 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

4 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

4 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

6 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

7 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

8 hours ago