தனுஷ் நல்ல அப்பா, ஐஸ்வர்யா ரொம்ப மோசமான தாய்! சுசித்ரா பரபரப்பு பேட்டி!

Suchitra about aishwarya rajinikanth and dhanush

சென்னை : தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பிரபல பாடகியான சுசித்ரா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி முன்னணி பாடகியாக இருப்பவர் சுசித்ரா. இவர் பிக் பாஸ் சீசன் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு இருந்தார். முன்னணி பாடகியாக வளம் வந்து கொண்டு இருந்த சமயத்திலே சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலன்களுடைய சீக்ரெட் புகைப்படங்களை வெளியீட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் பாடல்களை பாட  பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தான் பிக் பாஸ் 4 -வது சீசனிற்குள் நுழைந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து  விஷயத்தில் நான் தனுஷ் பக்கம் தான் நிற்பேன்.

அதற்காக தனுஷை எனக்கு பிடிக்கும் என்று அர்த்தம் இல்லை எனக்கு அவரை பிடிக்கவே பிடிக்காது. என்னை பொறுத்தவரை, ஐஸ்வர்யா தனுஷை ஏமாற்றி இருக்கிறார்.தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றி இருக்கிறார். விவாகரத்து செய்தி வெளிவந்த சமயத்தில் பயில்வான் ரங்கநாதன்  ஐஸ்வர்யாவை புகழ்ந்து தனுஷை மட்டம் தட்டி பேசினார்.

ஆனால், தனுஷ் அவருடைய குழந்தைகளுக்கு ஐஸ்வர்யாவை விட சிறந்த பெற்றோராக இருந்துள்ளார். ஐஸ்வர்யா ஒரு தாயாக இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போட்டுகொண்டு தன்னையே தான் ப்ரோமோஷன் செய்துகொண்டார். தனுஷ் எனக்கு ஜென்ம எதிரி எல்லாம் இல்லை. ஆனால் கார்த்திக் உடன் சேர்ந்து என்னுடைய கேரியரை நாசமாக்கிவிட்டார். அந்த கோபம் அவர் மீது எப்போதுமே இருக்கிறது.

ஆனால், விவாகரத்து விஷயத்தில் தனுஷ் பக்கம் நியாயம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஐஸ்வர்யா அவருடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இல்லை” என விமர்சித்து பேசியுள்ளார். இவர் இப்படி வெளிப்படையாக விமர்சித்து பேசி இருப்பது சினிமா துறையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்