இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், நேற்று ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் 4 மணிக்கும் வெளியானது.
இதனையடுத்து, வரும் ஜனவரி 13, 14, 15,16 ஆகிய தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளாக வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதைப்போல, உயரமான பேனர், வைத்து பாலாபிஷேகம் செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திரைப்பட விநியோகஸ்தர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி அரசனை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 12, 13 மற்றும் ஜனவரி 18 ஆகிய 3 நாட்கள் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜன 14, 15, 16, 17ம் தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் 3 நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் அஜித் ரசிகர்கள் இந்த பொங்கலை துணிவு, வாரிசு படத்தை பார்த்து உற்சாகத்துடன் கொண்டாடவுள்ளார்கள்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…