டாணாக்காரன் பட இயக்குனரை அதிர்ச்சிக்குள்ளாகிய காவல்துறை அதிகாரி.., என்ன சொன்னார் தெரியுமா?

Published by
Rebekal

இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளும் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் இந்த படம் திரையிடப்பட்ட பொழுது இயக்குனர் தமிழும் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ், டாணாக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளிலும் திரையிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படம் பார்த்துவிட்டு காவலர் பயிற்சி பள்ளியிலுள்ளவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், படத்தை திரையிடுவதற்கு ஆணை பிறப்பித்த காவலர் பயிற்சி துறை அலுவலர்களுக்கும், அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்து கிளம்பும் பொழுது ஏன் இந்த படத்தை திரையிட செய்கிறீர்கள் என தான் கேட்டதாகவும், அதற்க்கு, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மக்களுக்காக உழைக்கும் காவலர்கள் இந்த சிஸ்டத்திற்குள் வரவேண்டும் என நீங்க சொன்ன செய்தி இந்த பசங்களுக்கு போய் சேர வேண்டும் என காவல்துறை தலைவர் தன்னிடம் சொன்னதாகவும், அவர் அப்படி சொன்னது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டாணாக்காரன் திரைப்படம் யாரிடம் போய் சேர வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களிடம் போய் சேர்ந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago