Categories: சினிமா

ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்…நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.!

Published by
கெளதம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.

ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ் பிரபலங்கள் முதல் தெலுங்கு பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

பிரச்சனை ஓவர்: மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…மன்னித்த த்ரிஷா.!

பின்னர், மன்சூர் அலிகான் தயக்கம் காட்டி மன்னிப்பு கேட்க மறுத்திருந்தாலும், (நவம்பர் 24ம் தேதி) த்ரிஷா தன்னை மன்னித்து விட வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட  த்ரிஷா, தனது X தள பக்கத்தில், “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பதே தெய்வ பண்பு” என்று குறிப்பிட்டுஇருந்தார்.

ஹீரோயின்களுடன் பார்ட்டி! 1000 கோடி செலவு…சிரஞ்சீவியை விமர்சித்த மன்சூர் அலிகான்!

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக, த்ரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது எழுத் துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவிற்கு காவல்துறை அறிவுரை கூறிஉள்ளது.

இந்த சர்ச்சை விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் என்றும், பிரச்சனை இதோட முடிந்தது என்று பார்த்தால் ஓயாது போல் தெரிகிறது. சரி என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

சர்ச்சை பேச்சு

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை” என பேசியிருந்தார்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago