பார்ட் 2 சாபத்தை ஒழித்து கட்டிய ‘டிமான்டி காலனி 2’? பிளாக்பஸ்டர் கம்மிங்..!!

Published by
பால முருகன்

சென்னை : டிமான்டி காலனி 2 படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படம் பயங்கர த்ரில்லாக இருப்பதாகப் பாராட்டி வருகிறார்கள்.

திகில் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும் படம் என்றால் டிமான்டி காலனி தான். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆக 15 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரீமியர் காட்சி பிரபலங்களுக்குப் போட்டுக்காட்டப்பட்டது. அதில் படத்தினை பார்த்த பிரபலங்கள் பலரும் படத்தைப் பற்றி தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்துப் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாண்டிராஜ், “டிமான்டி காலனி 2 படம் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு நல்ல தொடரை வழங்கியுள்ளது. அருள்நிதிக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் அவருக்குப் பட வாய்ப்புகள் குவியப்போகிறது. பிரியா பவானி சங்கர் படத்தில் நன்றாக நடித்துள்ளார். படத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நன்றாக நடித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

அவரைப்போல, இயக்குனர் பரத் நீலகண்டன் ” பொறாமைப்படக்கூடிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அருள் நிதி மீண்டும் ஒருமுறை  டிமான்டி காலனி 2 உடன் இரட்டை திகில் மற்றும் கற்பனையுடன் வந்துள்ளார். படம் மிகவும் நன்றாக இருக்கிறது படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.  இவர்களைப் போல, கீர்த்தி பாண்டியன், வைபவ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் படத்தினை பாராட்டி இருக்கிறார்கள்.

படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள காரணத்தால் கண்டிப்பாகப் படம் மக்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பிளாக் பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக, இந்த படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது என்றால் தமிழ் சினிமாவில் பார்ட் 2 சாபம் ஒழிக்கப்படும் என்றே சொல்லலாம்.

ஏனென்றால், தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படத்தினுடைய இரண்டாவது பாகம் எடுத்தாலே அந்த படம் தோல்வி அடைந்து விடும் என்கிற வகையில் சாபம் இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே இதுவரை வெளியான பார்ட் 2 படங்கள் எல்லாம் முதல் பாகம் அளவுக்கு ஹிட் ஆகாமல் தோல்வி அடைந்து இருக்கிறது. குறிப்பாகக் கடைசியாக வெளியான இந்தியன் 2 படத்தினை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியைச் சந்தித்து இருந்தது. இந்தியன் 2 மட்டுமின்றி, விஸ்வரூபம் 2, சாமி 2, கலகலப்பு 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்கள் எல்லாம் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. எனவே, டிமான்டி காலனி 2  படம் வெற்றி பெற்று இந்த சாபத்தைப் போக்கி ஹிட் படமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

2 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

2 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

2 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

3 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

3 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

3 hours ago