தமிழ் சினிமாவில் கவுண்டர் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கவுண்டமணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ” பழனிச்சாமி வாத்தியார் ” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஒரு காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வந்த இவர் கடைசியாக தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான வாமை எனும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து கவுண்டமணி எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறார். அதன்படி, இவர் தற்போது ” பழனிச்சாமி வாத்தியார் ” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கிறார். படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த ” பழனிச்சாமி வாத்தியார் ” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுண்டமணி சினிமாவிற்குள் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…