தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் தமிழில் வெளியிட உள்ளது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழில் ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கும், ஊ அண்டே மாமா எனும் தெலுங்கு பாடலுக்கும் தமிழிலும் தெலுங்கிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அந்த பாடலில் ( தமிழிலும் , தெலுங்கிலும் ) வரிகள் ஆண்களை மிகவும் இழிவாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளது என தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் அமைப்பும், ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.
ஆனால், இந்த பாடல், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா ஆட, ஆண்ட்ரியா பாட நாளை புஷ்பாவின் அந்த பாடல் காட்சி தருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…