ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், பலர் தங்களது பணத்தை இதில் செலவிடுவதால், பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு சில சினிமா பிரபலங்கள் இந்த ரம்மி விளையாட்டை விளம்பர படுத்தும் விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும் சிலர் அதில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மக்களின் நலன் கருதி அதில் நடிக்க மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஷாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- இந்த விஷயம் தெரிஞ்சு தானே அஜித்தை புக் பண்றாங்க..? செம கடுப்பான துணிவு இயக்குனர்.!
இது குறித்து பேசிய விஷால் “ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் எவ்வளவு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த விளையாட்டால் பல குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. என்னை பொறுத்தவரை, இந்த விளையாட்டை கண்டிப்பாக தடை செய்யவேண்டும்.
இரண்டு கைகளில் நேர்மையாக சம்பாதித்தால் தான் அது காசு. அந்த காசை எடுத்துக்கொண்டு ஒரு வேலை சாப்பாட்டிற்க்கு குடும்பத்தில் கொடுத்தால் தான் ஆம்பளை என்று அர்த்தம். அதைவிட்டுவிட்டு இந்த மாதிரி சூதாட்டம் விளையாடாதீர்கள். இந்த விளம்பரத்தில் நடிப்பது பணம் வருகிறது என சிலர் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம், என்னிடமும் இந்த விளம்பரத்தில் நடிக்க கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன்” என கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…