ஒருபக்கம் காவல்பணி! மறுபக்கம் தமிழை காக்கும் பணி : கவிஞன் சினேகன்

Default Image

கவிஞர் சினேகன் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் முதன்முதலில் தமிழ் திரைப்படமான புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், சினேகன் காந்தியம் படத்தின் இசைஇ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களில் பலரும் தமிழ் பற்றோடு இருப்பார்கள். ஒரு பக்கம் காவல்பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பனி என்று இரண்டையும் ஒன்றாக பேலன்ஸ் செய்வார்கள்.
அதனால் தான், காவல்துறை அதிகாரி காளிமுத்து பாடலாசிரியராக அறிமுகமாகி இருக்கும் ‘காந்தியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன்.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்