வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ 10 ) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் சுனில், அணு இமானு வேல் என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இருகப்பற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு பிரபல இயக்குனரான கார்த்தி என்பவர் இயக்கத்தில் ‘ரெய்டு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இந்த திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 3 படங்களில் எந்த படம் அதிகமாக ஓப்பனிங்கில் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…