எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என நடிகர் ஜெயம் ரவி சைரன் பட பிரஸ் மீட்டில் பேசியுள்ளார்.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நேற்று (பிப்16-ஆம் தேதி) வெளியான திரைப்படம் சைரன். இந்த படும் சுஜாதா விஜயகுமாரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 1000 திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று சைரன் படக்குழு பிரஸ் மீட் ஒன்றை நடத்தி பேசியது. அதில், நடிகர் ஜெயம்ரவியிடம் பல்வேறு கேள்விகள் குறித்து கேட்கப்பட்டது, அப்போது அரசியல் கேள்விகளும் எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, நடிப்பைத் தவிர அரசியல் ஈடுபாடு எப்போதும் இல்லை என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தற்போது வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அந்த முயற்சிக்கு சைரன் படம் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல் ஆசை இருக்கிறதா? என்று தொடர்ந்து என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை, சினிமாவை தாண்டி இப்போதைக்கு சிந்தனையில்லை.
அதைப்போல விஜய் அண்ணா இடத்தை நான் உட்பட யாராலும் நிரப்ப முடியாது என்றார். பின்னர், அவரிடம் விஜய் அண்ணாக்கு வாக்கு அளிப்பீர்களா? என்ற கேட்டதற்கு என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என்று பதில் கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…