இயக்குனர் ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நிறைவடைந்தது.
தற்பொழுது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் செல்கிறார். இன்று காலை ஹைதராபாத் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது, தனது விமானத்திற்கு செல்லும் அவசரம் இருந்தாலும், வழியில் தனது ரசிகை தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள காத்திருந்ததை அறிந்து அவருடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டு சென்றார்.
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக நடிகர் ரஜினகாந்த் லால் சலாம் படத்தில், கேமியா ரோலில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வேட்டையினில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அநேகமாக, இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும், விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…