Categories: சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு படத்தின் போஸ்டரை வெளியிட்டு….சப்ரைஸ் கொடுத்த படக்குழு..!!!

Published by
kavitha

இன்று தமிழ்சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயந்தாரவின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Related image

 

தமிழ் சினிமாவில் ஐயாவில் அறிமுகமாகி இன்று அன்னார்ந்து பார்க்கும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தன்னுடைய சினி வாழ்வில் எத்தனை ஏற்றங்களோ அத்தனை சறுக்கல்களை சந்தித்து,அவற்றை எதிர்கொண்டு இன்று ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு தெரியாமல் படத்தின் போஸ்டரை  வெளியிட்டு பரிசளித்துள்ளது படக்குழு.

உன்னைப்போல் ஒருவன்,பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன் ஹூரோயினியாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம் என்ற படத்தினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக தகவல் வந்தது.

படம் முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாக படக்குழு சொன்னார்கள். ஆனால் படத்தினை  தெலுங்கு மற்றும் இந்தியில் நடிகை தமன்னா நடிகர் பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடரவிருப்பதாகச் கூறியது படக்குழு.

மேலும் நயன் நடித்த இந்த படம் வெளிவருமா என்று நடிகை நயன் மற்றும்  இயக்குநருக்கு மட்டுமே தெரியும் என்றிருந்த நிலை நிலவிய நிலையில் படத்தின் இணைத் தயாரிப்பாளரான இசியயமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒ எஸ் ஆர் பிலிம்ஸ் வெளியேற்றப்பட்டது.இதனால் தற்போது படத்தை ‘செம போத ஆகாதே’ படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது.

நயன் நடித்த இந்த படத்தை வெளியிட தயாராகும் புதிய தயாரிப்பாளர் நிறுவனம் படத்தின் வியாபார சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது.இந்நிலையில் நடிகை நயனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக புதிய டைட்டில் ஃபாண்டுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் படு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago