Categories: சினிமா

வெள்ள நிவாரணத்திலும் பிசினஸ் முக்கியமா? உதவி செய்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

Published by
கெளதம்

தற்போது, மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நேரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு மட்டுமல்லாது, பிரபலங்கள், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்காக நடிகை நயன்தாரா தரப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால், அது கடைசியில் சர்ச்சையில் போய் முடியும் என அவர் எண்ணி பார்த்திருக்க மாட்டார்.

தற்போது மழை மெல்ல குறைந்தாலும், சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. இந்த நேரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!

அந்த வகையில், நயன்தாரா தனது ஃபெமி 9 என்ற பிராண்ட் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், நாப்கின்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். இதனை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் நயன்தாராவை ஒரு பக்கம் மனதாரப் பாராட்டி வந்தாலும், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அதாவது, நயனின் ‘ஃபெமி 9’ நிறுவனத்தின் மூலம் உதவி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கூட, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சொந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு “9 ஸ்கின்” தொடங்கிருப்பதாக அறிவித்தார். இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன், டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை நயன்தாரா, கடந்த இருபது வருடங்களாக தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா கடைசியாக அன்னபூரணி என்ற படத்தில் நடித்திருந்தார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago