சென்னை : நடிகை நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) தனது 39வது பிறந்தநாளை கொண்டுகிறார்.
அவரது சிறப்பு நாளைக் கொண்டாடும் வகையில், விக்கியின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு சிறப்பு காதல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் விக்கிக்கு முத்த மழை பொழிந்த ரொமான்டிக் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ஹேப்பி பர்த்டே மை எவ்ரிதிங். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன். “உயிர், உலகம் போல உங்களுக்கு அனைத்தும் கிடைக்கனும் ” என காதல் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2015-ல் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மலர்ந்த காதல், சில வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இருவரும் 2021-ல் ஒரு தனிப்பட்ட விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், 2022-ல், நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சென்னையில் ஒரு பிரமாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த உடனேயே, இந்த ஜோடி 2022 அக்டோபரில் தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட ஆண் குழந்தைகளை வரவேற்று உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்ததாக அறிவித்தனர். அடிக்கடி தங்களது மகன்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதும் உண்டு.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…