Nayagan and Thalapathy - S.J. Suryah [File Image]
ஒரு படத்தின் உண்மையான வெற்றி எப்போதுமே வெளியீட்டின் போது தெரியாது என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நாயகன் மற்றும் தளபதி படங்களை உதாரணமாக வைத்து பேசியுள்ளார்.
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு படம் வெளியாகும் நேரத்தில் கொண்டாடப்படாமல் இருப்பதன் உண்மையான காரணத்தையும் சிறிது நாட்களளுக்கு பிறகு, அதன் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மனநிலை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் ஹிட் ஆனதன் மூலம், பாராட்டு மழையில் நினைந்த வருகிறார். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு படங்களிலுமே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பம் வெளிவதற்கு முன்னதாக, படத்தை விளம்பரப்படுத்த குமுதம் ஊடகத்திற்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “நாயகன் மற்றும் தளபதி போன்ற படங்கள் ஆரம்பத்தில் பார்வையாளர்களால் வரவேற்கப்படாமல், தற்போது தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள்” என்பது குறித்து பேசினார்.
மலையாள சினிமாவில் மிரட்ட போகும் எஸ்.ஜே.சூர்யா! யாருக்கு வில்லனாகிறார் தெரியுமா?
அதாவது, கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் பார்க்குக்கும் பொழுது, சீட்டெல்லாம் கிழிச்சு பஞ்செல்லாம் வெளிய போட்டு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்தது. ஆனால், இப்போது அந்த படம் ரசிகர் பட்டாளத்தை பெற்று, சிறந்த படமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி முக்கிய வேடங்களில் நடித்த தளபதி திரைப்படம் ஆரம்பத்தில் பிளாப் என்று பேசினார்கள். ஆனால் இப்பொது ஒரு ஹிட் திரைப்படமாக பேசப்படுகிறது. இது தான் மக்களின் மனநிலை சினிமாவை பற்றி முதலில் புரிந்துகொள்ளாவிட்டாலும் பின்னர் புரிந்துகொள்கிறார்கள் என்று கூறினார்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…