இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் -செல்வராகவன் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் செல்வராகவன் நானே வருவேன் படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ஒருநாள் தனுஷ் திடீரென ஒரு கதையை தயார் செய்து விட்டு என்னிடம் வந்தார். அந்த கதையை என்னிடம் கூறினார். எனக்கும் அந்த கதை மிகவும் பிடித்திருந்தது.
அந்த கதையை நானே இயக்கலாம் என முடிவு செய்தேன். அதுதான் “நானே வருவேன்”. இந்த படத்தின் கதை தனுஷுடையது திரைக்கதையை நான் இயக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…