கதையை கேட்டு மிரண்டுட்டான்.! சிம்புவை ஒருமையில் பேசி வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்.!

Published by
Castro Murugan

சிம்புவின் அடுத்த பட இயக்குவது பற்றி மிஷ்கினிடம் பேசுகையில், அவன் கதையை கேட்டு மிரண்டுட்டான் என சிம்புவை ஒருமையில் பேசி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

இயக்குனர் மிஸ்கின் திரைக்குப்பின்னால் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் மேடை ஏறியதும் தங்களது நெருங்கிய நண்பர்களை கூட நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசி வருவார்கள். அது தான் மேடை நாகரீகம்.

ஒரு சிலர் மட்டுமே தனது நண்பர்களை எப்படி வெளியில் அழைகின்றோமோ அதேபோல மேடையிலும் அழைத்து பேசுவார். அதில் ஒருவர்தான் இயக்குனர் மிஸ்கின் தான். எப்படி மற்றவரிடம் பேசுகிறோமோ அதையே மேடைகளிலும் பேட்டிகளிலும் பேசி விடுகிறார்.

மிஸ்கின் ஒரு பேட்டியில் பேசும்போது சிம்பு படத்தை இயக்குவது உண்மைதானா என்பது போல அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் சற்றும் யோசிக்காமல், ‘சிம்புவிடம் நான் கதை கூறிவிட்டேன். அவன் இந்த கதையை கேட்டு மிரண்டு விட்டான்.’ என தெரிவித்துவிட்டார். நெருங்கிய நடிகரை பேசும்போது மரியாதையாக பேச வேண்டும் என சிலர் இருப்பர் ஆனால் தான் எப்படி அவரிடம் பேசினோமோ அதையே பொது வெளியிலும் பேசி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

சிம்பு நடிப்பில் அடுத்ததாக, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதற்கடுத்ததாக சிம்பு, இயக்குனர் ராம், மிஸ்கின், சுதா கொங்காரா ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார் என பட்டியல் நீண்டு செல்கிறது. இதில் யாரை தேர்வு செய்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

7 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

28 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

32 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

46 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

58 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago