என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாம் இறைவன் மீதும், விதியின் மீதும் தான்! சிம்புவின் திருமணம் குறித்த கேள்வியால் கண்கலங்கிய டி.ராஜேந்திரன்!

Published by
லீனா

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிம்புவின் தம்பியான குறளரசனுக்கும், நபீலாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது சிம்புவின் திருமணம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ராஜேந்திரன், இறைவன் அருளால் சீக்கிரம் நடைபெறும் என்றும் இது தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாம் இறைவன் மீதும் விதியின் மீதும் தான், கேள்வி கேட்பது உங்களது கடமை, பதில் கூறுவது என்னுடைய கடமை. ஆனால், பதில் கூற முடியாமல் போவது என்னுடைய சூழ்நிலை என கண்ணீர் கசிந்த கண்களுடன் பதிலளித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

5 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

10 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago