என் மானம் போச்சு.. மரியாதை போச்சு... இயக்குனர் செயலால் புலம்பும் பிரபல நடிகை.!

நடிகை மஹிமா நம்பியார் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் "ரத்தம்" திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகை மஹிமா நம்பியார் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மஹிமா நம்பியார் தூங்குவதை புகைப்படம் எடுத்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “கடின உழைப்பு என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

unknown node

இதனை பார்த்த நடிகை மஹிமா நம்பியார்  சற்று ஷாக்காகி ”  அட கடவுளே… மானம் போச்சு..மரியாதை போச்சு.. இந்த பதிவுக்கு அப்புறம் நான் இந்தியா திரும்ப விரும்பவில்லை. இது சீட்டிங். எங்கே தயாரிப்பாளரின் கடின உழைப்பு புகைப்படம்?” என குறிப்பிட்டுள்ளார்.

unknown node

மேலும் நடிகர் விஜய் ஆண்டனியும் தனது ட்வீட்டர் பக்கத்தில் “அவங்க கடின உழைப்பு பன்றத பாக்கும் போது.அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு” என ஜாலியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node
என் மானம் போச்சு.. மரியாதை போச்சு... இயக்குனர் செயலால் புலம்பும் பிரபல நடிகை.!