harshavardhan and vidyasagar [File Image]
தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்ததும் அவர்களை மக்கள் சரியாக கொண்டாடாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்கள் பெரிய அளவில் வெளியே தெரிந்தாலும் கூட, அவர்களுடைய பெயர் பெரிய அளவிற்கு வெளிய தெரிந்தது இல்லை. அப்படி தான் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட, இவர் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.
இவர் இசையமைத்த சந்திரமுகி, அன்பே சிவம், பூவெல்லாம் உன் வாசம், கில்லி ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் அந்த சமயம் எல்லாம் பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் மட்டுமில்லாமல் இப்போது கூட இவர் இசையமைத்திருந்த பாடல்கள் எல்லாம் இப்போதும் பலரும் கேட்டு ரசித்து வருகிறார்கள்.
இருந்தாலும், இசையமைப்பாளர் வித்யாசாகரை பெரிய அளவில் மக்கள் கொண்டாடவில்லை. இதனை அவருடைய மகனும் பாடகருமான ஹர்ஷ வர்தன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஹர்ஷ வர்தன் ” நான் மகனாக இல்லாமல் ஒரு ரசிகராக சொல்லவேண்டும் என்றால் மக்கள் அப்பாவை சரியாக கொண்டாடவில்லை.
என்னுடைய அப்பாவுக்கு இருக்கும் அந்த இசை குறித்த அறிவு எல்லாம் எங்களுடைய குடும்பத்திற்கு தெரியும். ஆனால், மக்களுக்கு தெரியவில்லை. அப்போது மட்டுமில்லை இப்போதும் தான். அவர் இசையமைத்து கொடுத்திருந்த ஹிட் பாடல்களை வைத்து தான் அவர் யார் என்று மக்களுக்கு தெரிகிறது. இதன் காரணமாக தான் நான் அப்பாவுடைய பழைய பாடல்களை திரும்பவும் என்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும், ஹர்ஷ வர்தன் தொடர்ச்சியாக தன்னுடைய தந்தையின் பாடல்களை பாடி வீடியோவை வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்களாக சென்னையில் பிரமாண்டமாக இசைக்கச்சேரியை இசையமைப்பாளர் வித்யாசாகர் நடத்தினார். அவருடைய இசை கச்சேரியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…