உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த ஜெயிலர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Jailer

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.  படம் வெளியாகி 2 வரங்களாகியும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். இதுவரை படம் உலகம் முழுவதும் 520 கோடி வரை வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், படம் இதுவரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 525 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை தவிர ஜெயிலர் திரைப்படம் எல்லா இடங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு தாக்கத்தை உருவாக்கி, ஆல் டைம் சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 70 கோடி வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் படம் 60 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதைப்போல படம் கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது 525 கோடி வசூல் செய்து ஜெயிலர் படம் பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்சியுள்ளது.

தமிழில் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 2.0 திரைப்படம் இருந்தது. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இருந்த நிலையில், தற்போது அதனுடைய சாதனையை ஜெயிலர் படம் முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்