Categories: சினிமா

மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு இழப்பு…அடுத்தடுத்த மடிந்த ஹிட் திரைப்படங்கள்.!

Published by
கெளதம்

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ம் தேதி) நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், பிக்பாஸ் தர்ஷன் நடித்த நாடு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான மூன்று நாட்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும் இல்லாமல், பாசிட்டிவ் விமர்சங்களை பெற்றது.

இந்த மூன்று படத்தின் கதைகளும் நன்றாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த மூன்று படங்கள் உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் சென்னை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனால், இந்த மூன்று படங்களும் வசூலில் தத்தளிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆம், தமிழ்நாட்டில் அணைத்து திரையரங்குளிலும் படம் வெளிவந்தாலும், சென்னை போல் முக்கிய மாவட்டங்களில் இவ்வாறு மழை – வெள்ளம் ஏற்பட்டதால், இந்த மூன்று படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

இதில், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. முதல் நாளில் 1.5 கோடி வசூலித்தது, இதில் நயன்தாராவுக்கு சம்பளம் மட்டும் 10 கோடி என்று சொல்லப்படுகிறது. இதனால், படத்தின் பட்ஜெட் கூட வசூலில் எடுக்க முடியாது போல் தெரிகிறது. இது நயன்தாராவுக்கு அடுத்த இழப்பாக பார்க்கப்படுகிறது. இனிமேல் வரும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் குறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அன்னபூரணி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75வது படமான “அன்னபூரணி” அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அசைவம் செய்து அசத்தினாரா நயன்தாரா? அன்னபூரணி விமர்சனம்…

பார்க்கிங்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

நாடு

இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். மேலும், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘நாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ள சரவணன் இயக்கியுள்ளார். ஸ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரிக்க., சத்யா இசையமைக், சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நாளை டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

22 minutes ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

48 minutes ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

51 minutes ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

3 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

4 hours ago