தன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
நிபுணன் படத்தின் போது நடிகர் அர்ஜுன் நெருக்கமான காட்சிகளை இயக்குனரிடம் வேண்டும் என்றே கேட்டு வாங்கினார் என்றும் அந்த காட்சியில் வேணுமென்றே பின் பாகத்தை தடவினார் என்றும் நடிகை ஸ்ருதி நாராயணன் குற்றம் சாட்டி இருந்தார்.
நடிகர் அர்ஜுனா இது போல செய்தார் என்று பலரும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் பிரபல கன்னட செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேசிய நடிகர் அர்ஜுன், நான் சினிமாவில் எப்போதும் தவறாக நடந்து கொண்டதே இல்லை.
இது போன்ற ஆட்களின் செயலால் மீடூவிற்கு மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது. அவர் என் மீது வைக்கும் குற்ற சாட்டிற்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா, இல்லை ஆதாரம் இருக்கிறதா. அவருக்கு என்னிடம் நடிக்க விருப்பம் இல்லை என்றால் அப்போதே அவர் சொல்லி இருக்க வேண்டியது தானே. என்மீது அவர் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது நான் கண்டிப்பாக வழக்கு தொடருவேன்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…