Categories: சினிமா

என்ன தொட எந்த உரிமையும் இல்லை! தினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் 1 மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் கடுமையாக வெடித்து வருகிறது. அதைப்போல, ட்ரோல் செய்யப்படும் விஷயங்களும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதி இருந்தார். இதனை பார்த்த பலரும் சரியாக படித்திருந்தால் சரியாக எழுதி இருக்கலாம் என்பது போல ட்ரோல் செய்தனர். இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிய வாக்கு வாதாமே வெடித்துள்ளது.

வேறு யாருக்கும் இல்லை தினேஷ் மற்றும் பூர்ணிமா இருவருக்கும் தான். இந்த வாரம் போட்டியாளரால் தங்களுக்குள் மாற்றி மாற்றி கையிற்றால் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்பது போல டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாயா மற்றும் தினேஷ் ஆகியோர் தங்களுடைய கைகளை கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

எப்பவும் தூக்கம் தான்! தமிழில் பெயரை தப்பாக எழுதிய வனிதா மகள் ஜோவிகா!

அப்போது பேசிக்கொண்டிருந்த தினேஷ் திடீரென மாயா கையில் சொல்லாமல் கொள்ளாமல் கயிற்றை கட்டினார். இதனால் சற்று கடுப்பான மாயா பேசிகிட்டு இருக்கும்போது எதற்கு இப்படி செய்கிறார்? அவர் போக்குக்கு கயிற்றை கட்டிக்கொண்டு இழுக்கிறார் என்று கூறுகிறார். பிறகு இருவருக்கும் இடையே வாக்கு வாதம் பெரிதாக வெடிக்க என்னை தொட உங்களுக்கு எந்த உரிமையையும் இல்லை என மாயா கத்த தொடங்குகிறார்.

பிறகு தினேஷ் ஒழுங்கா கயிற்றை கட்டு என்று கூறுகிறார். பிறகு கட்ட முடியாது என்பது போல கயிற்றை வீசி விட்டு மாயா தினேஷை பார்த்து நான்சென்ஸ் என்று கூறுகிறார். இதனால் கடுப்பான தினேஷ் யாரு நான்சென்ஸ்? நீதான் நான்சென்ஸ் என்று பதிலுக்கு கூறினார். பிறகு சண்டை போட காரணம் கிடைத்து விட்டதால் நீ சந்தோச படாத என்று தினேஷ் கூற அதற்கு மாயா நீங்க பேசாதீர்கள் உங்கள் மீது கப்பு அடிக்கு என்பது போல பதில் கூறினார்.

இதனால் கடுப்பான தினேஷ் நீ முதலில் 4 வாட்டி குளி உன் மீது ரொம்பவே கப்பு அடிக்கிறது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்த நிலையில் நிக்சன் தலையிட்டு கயிற்றை சரியாக கட்டிவிட்டு வாக்கு வாதத்தை முடித்து வைத்தார்.

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

1 hour ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

2 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

5 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

6 hours ago