கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். படம் வெற்றி பெற்றதை போல் படத்திலுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், விரைவில் ஜிகர்தண்டா 2 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளதாம்.
அந்த படத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் மற்றும் மற்றோரு பெரிய நடிகரும் நடிக்கவுள்ளராம். மேலும் இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பாளர் கதிரேசனே தயாரிப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
மேலும் நடிகரும் நடன இயக்குனருமான ராகவ லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தாக சந்திரமுகி 2 மற்றும் அதிகாரம் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…