Trisha - Chiranjeevi [File Image]
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, த்ரிஷாவுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி குரல் கொடுத்திருக்கிறார்.
நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவி தனது X தள பக்கத்தில், “நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவைப் பற்றி கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தது. இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அல்லது பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும், அருவருப்பானதாக இருக்கிறது.
4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!
இந்தக் கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். நான் த்ரிஷா மற்றும் இதுபோன்ற கொடூரமான கருத்துகளுக்கு ஆளாக வேண்டிய ஒவ்வொரு பெண்ணுடனும் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், இதற்கு நடிகை த்ரிஷா அவருக்கு, “நன்றி சிரு சார்” என்று பதிலளித்துள்ளார்.
இதுவரை இந்த சர்ச்சை கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. நேற்றைய தினம் த்ரிஷா பற்றி மன்சூர்அலிகான் பேசிய சர்ச்சை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் இவ்வாறு பேசியதற்கு அனைவருடைய முன்னாடியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என நடிகர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியீட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் ”நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாக பேசவில்லை, த்ரிஷா பற்றி நான் பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துள்ளது. என்னிடம் எதை பற்றியும் கேட்காமல் எப்படி கண்டன அறிக்கை விடலாம்? 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நடப்பதே வேறு.
திரைப்படத்தில் கற்பழிப்பு காட்சி உண்மையானது என்று நினைக்கிறீர்களா? அது உங்களுக்குத் தெரியாதா? இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா?கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியதால் பேசினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…