சிறகடிக்க ஆசை சீரியல் ..ரோகினி மறைக்கும் விஷயத்தை கணிக்கும் மனோஜ் .!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான  எபிசோடில்[செப்டம்பர் 5] ஒரு மாலையை வைத்து மனோஜின் மனதை  மாற்றி விடுகிறார் ரோகினி..

MANOJ,ROHINI (5) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான  எபிசோடில்[செப்டம்பர் 5] ஒரு மாலையை வைத்து மனோஜின் மனதை  மாற்றி விடுகிறார் ரோகினி..

மீனாவுக்கு  அல்வா கொடுக்கும் முத்து ;

முத்து மீனாவை  சமாதானப்படுத்த வெள்ளை கொடியும் அல்வாவும் வாங்கிட்டு வராரு இத பாத்தா மீனா கோவமா எல்லார்கிட்டயும் பொண்டாட்டிய பத்தி இப்படித்தான் சொல்லுவீங்களா.. அப்படின்னு கேக்குறாங்க.. அப்படி எல்லாம் சொன்னா தான் மீனா சவாரி நல்லா கிடைக்கும் இதெல்லாம் ஒரு தொழில் யுக்தி அப்படின்னு சொல்றாரு முத்து ..விஜய் டிவில நிஷா அவங்க புருஷன் ரியாஸ தாக்கி தான் எப்பவுமே பேசுவாங்க அப்போ  டிவில பாக்குற எல்லாருமே சிரிப்பாங்க இல்ல அது மாதிரி தான் இதுவும் அப்படின்னு சொல்லி மீனாவ சமாதானப்படுத்துறாரு  .வேணும்னா  நீயும் பூ விக்க  போற இடத்துல என்ன திட்டிக்கோ.. எப்புடி  ஏன் புருஷன்  ரவுடி பிசாசு அப்படின்னு பேசவா.. தாராளமா பேசிக்க அதனால நல்லது நடந்தா எனக்கு சந்தோசம் தான்னு முத்து  சொல்லுறாரு  அதோட மீனாவும் சமாதானம் ஆகிடுராங்க ..

மனோஜின் அதிரடியான கேள்விகள் திணறும் ரோகினி ;

இப்போ ரோகிணி பயந்துகிட்டே வீட்டுக்குள்ள வராங்க மனோஜ் கேட்கிற கேள்விக்குலாம் முன்னாடியே பிளான் பண்ணி வச்சுருக்காங்க . இப்போ மனோஜ் ரோகினி பாத்து  எங்க போயிட்டு வர்ற யாரை பார்த்துட்டு வர்ற எனக்கு என்னமோ அன்னைக்கு போட்டி நடந்த அப்போ  சொன்னதெல்லாம் உண்மையா இருக்குமோன்னு  தோணுது.. நீ என்கிட்ட எதையோ மறைக்கிறியா   அப்படின்னு கேக்குறாங்க.. ரோகிணி அவங்க பேக்ல இருந்து கருங்காலி மாலை எடுத்து மனோஜ்க்கு கொடுக்கிறாங்க இந்த மாலை ஒரு சாமியார் கிட்ட பூஜை செஞ்சு வாங்கிட்டு வரேன் உன் நல்லதுக்கு தான் மனோஜ்.. அவரை பக்க தான் போனேன் . மனோஜ்  நம்பவே இல்லை.. உனக்கு இதெல்லாம் பிடிக்காதே அப்படின்னு சொல்றாரு.. அப்படி இல்ல மனோஜ் உனக்கு ஒரு நல்லது நடந்தா  எனக்கும் சந்தோசம் தானே அப்படின்னு சமாளிச்சு விடுறாங்க.

MUTHU,MEENA (8) (1)

ஓடுகாலி ..கருகாலி ..கலாய்க்கும் முத்து ;

ஆனாலும் மனோஜ் நம்பற மாதிரி இல்லையே அப்படின்னு சொல்றாரு.. உடனே ரோகினி அழுது நடிக்க ஆரம்பிச்சிடுறாங்க இதை பார்த்த மனோஜ் சரி அழுகாத நான் நம்புறேன் அப்படின்னு சொல்றாரு. இப்போ அந்த மாலையை எடுத்துட்டு போயி சாமி ரூம்ல வச்சுட்டு வந்துட்டாரு. காலைல அந்த மாலையை பூஜை செஞ்சுட்டு கழுத்துல போடுறாரு ..இதை பார்த்த முத்து  கிண்டல் பண்றாரு.. ஓடுகாளி.. கருங்காலி.. நல்லா இருக்கே  அப்படின்னு  சொல்றாரு.. எப்பவும் போல ரோகிணி முத்து கிட்ட சண்டைக்கு போறாங்க. இப்போ பாட்டி வீட்ல இருந்து கடலை மூட்டை மூட்டையா வந்து இறங்குது ..இத பாத்த விஜயா என்ன உங்க அம்மா எப்பவும் இல்லாம இந்த வருஷம் நிறைய கொடுத்து அனுப்பி இருக்காங்க.. குடும்பம் பெருசா ஆகிகிட்டே வருது இல்ல அதனால தான்னு  அண்ணாமலை சொல்றாரு .இப்போ ஒவ்வொருத்தரும் கடலைய தனக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் கொடுக்கணும்னு பேசிட்டு இருக்காங்க .மீனா சொல்றாங்க நான் க்ரிஷுக்கு  கொஞ்சம் கொடுக்கணும் அப்படின்னு சொல்லவும் ரோகிணியோட முகம் மாறிடுது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்