Mankatha [file image]
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில், சமீபத்தில் கூட பையா படம் கூட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன கில்லி படம் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
விஜய் ரசிகர்கள் எல்லாரும் அந்த படத்தை கொண்டாட காத்து இருக்கும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மே 1-ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் சினிமா கேரியரில் முதன் முதலாக அதிக வசூல் கொடுத்து மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் என்றால் மங்காத்தா படத்தை கூறலாம். இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம்.
எனவே, விஜய் ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை கொண்டாட உற்சாகமாக இருந்த நிலையில், அஜித் ரசிகர்களும் பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் ஆகுமா என ஆவலுடன் காத்து இருந்த நிலையில், தற்போது மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளுடன் படத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டார்கள்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…