மதுரை அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்குமாரை பகத் சிங் போல சித்தரித்து வலிமையையும், வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு கட்டவுட் வைத்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவிட்டவர் நடிகர் அஜித். இவரது ரசிகர்கள் இவர் படம் வெளிவந்தாலே போதும் என கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை களைத்து கிட்டத்தட்ட 10 வருடங்காகிவிட்டது.
இருந்தும் தற்போது வரையில் அஜித் திரைப்படம் வெளியானால் திரையரங்கில் திருவிழா கோலம் தான். கட்டவுட், போஸ்டர், முதல் நாள் முதல் காட்சி என அதகளப்படுத்திவிடுவர்.
அதே போல சில ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறி தங்களது அன்பை வெளிக்காட்டுவதாக எண்ணி சர்ச்சை போஸ்டர்களை ஒட்டிவிடுவர். இதனையும் ஒரு காரணமாக எண்ணி தானோ என்னவோ தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார் போலும் அஜித்.
இருந்தாலும், அவரது ரசிகர்கள் விடுவதாயில்லை. மதுரையில், அண்மையில் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதில் அஜித்குமாரை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்து, அதில், ‘வருடங்கள் கடந்தாலும் வலிமையையும், வரலாறும் அழியாது.’ என வாசகம் அச்சிட்டுள்ளனர். அடங்காத அஜித் குரூப்ஸ் – மதுரை. என அதில் போடப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…