மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை.
இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே பெரும்பாலான இடங்களில் போட்ட பணம் திரும்பி வந்துவிட்டதாம். அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம் மட்டும்தானாம்.
தென் இந்தியாவில் இந்த நிலைமை என்றால் வட இந்தியாவிலேயும் இதே நிலைமை தானாம். அங்கும் தியேட்டர்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றதாம். அதனை நேரில் பார்த்த சாட்சி நம்ம இயக்குனர் அட்லீ தானாம். அட்லீ தற்போது மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருக்கிறார்.
அவர் அங்கு மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் கூட்டத்தை கண்டு மிரண்டுள்ளார். சந்தோஷத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது என வாழ்த்து கூறியுள்ளாராம்.
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…