சினிமா

லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது! ப்ளூ சட்டை மாறன் பதிவு!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களிலே வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவேண்டும் எனவும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும்  என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

லியோ சம்பவம் எதிரொலி: “திரையரங்குகளில் இனி நோ ட்ரெய்லர்” -திரையரங்கு உரிமையாளர் சங்கம் !

அப்போது லியோ படத்தின் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனவும், அதைப்போல  காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மனு அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், வழக்கமாக எல்லா படங்களையும் விமர்சித்து பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கங்களில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” லியோ ரிலீஸாகும் அக்டோபர் 19 வியாழன் விடுமுறை தினம் அல்ல. வேலை நாள்.

காலை 8 முதல் 10 வரை பீக் ஹவர் என்பதால்.‌. பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படலாம். ஆகவே வார இறுதி மற்றும் ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் மட்டுமே காலை 9 மணி சிறப்புக்காட்சியை அனுமதிக்க வேண்டும். அக்டோபர் 19 ஆம் தேதி காலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது” என கூறியுள்ளார்.

மற்றோரு பதிவில் ” கவர்மண்ட் கிட்ட எதுக்கு கெஞ்சனும்? ஸ்பெஷல் ஷோவுக்கு கோர்ட்ல அனுமதி கேளுங்க. நான்தான் அடுத்த சி.எம். எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்’ என்று தயாரிப்பாளரை உசுப்பி விட்டதே கமாண்டர்தான் என்று கூறப்படுகிறது. மாஸ் காட்டிய கமாண்டர். அதிர்ந்த அரசாங்கம்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோரு பதிவில் ” 7 AM ஷோ போட்டா.. படம் முடிய 10 மணி ஆகிடும். 9 AM ஷோ டிக்கட் ஏற்கனவே வித்தாச்சி. இந்த அடிப்படை லாஜிக் கூட தெரியாம லியோ தரப்பு 7 AM ஷோவுக்கு அனுமதி கேட்ருக்கு” எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ஏற்கனவே படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில், அந்த கோபத்தோடு ப்ளூ சட்டை மாறனை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago