மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், படத்தில் கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஜமுனா
கடந்த 1953-ஆம் ஆண்டு வெளியான ‘புட்டிலு’ படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜமுனா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கி சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ராமராவ், அக்கினேனி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
தமிழில் குழந்தையும் தெய்வமும், மனிதன் மாறவில்லை, மிஸ்ஸியம்மா, தூங்காதே தம்பி தூங்காதே, தங்கமலை ரகசியம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே 1950,1960 களில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார்
நடிகை ஜமுனா மறைவு
கடந்த 27-ஆம் தேதி நடிகை ஜமுனா தனது 80- வயதில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். பல பிரபலன்களும் இவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.
நடிகை ஜமுனாவின் பயோபிக் படம்
நடிகை ஜமுனா உயிரோடு இருக்கும்போதே அவருடைய வாழ்கை வரலாறு படமாக எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாம். தற்போது அதற்கான திரைக்கதை எழுதும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், படத்தை தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, சுவாரசியமான தகவல் என்னவென்றால், நடிகை ஜமுனாவின் வாழ்கை வரலாற்றில் அவருடைய கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். பேச்சுவார்த்தை நடந்துமுடிந்த பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…