த்ரில்லர் படத்தில் நடிக்கிறது குத்தமா? சொந்த வீட்டில் அருள்நிதி படும் வேதனை!

Published by
பால முருகன்

சென்னை : தொடர்ச்சியாக திரில்லர் கதை கொண்ட படங்களில் நடித்து வருவதால் என்னவோ நடிகர் அருள்நிதிக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க தான் வாய்ப்புகள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது.  இப்படியான படங்களில் அவர் நடிப்பதன் காரணமாக அவரை பார்ப்பவர்களுக்கு கூட அவர் கொஞ்சம் கோபம் கொண்ட ஆள் என்று திகில் பார்வையுடன் பார்ப்பது என்பது சகஜம் தான்.

அப்படி படம் பார்க்கும் மக்கள் தான் இருக்கிறோம் என்றால் அவருடைய வீட்டில் இருப்பவர்கள் கூட அருள்நிதியை பார்த்து மிகவும் பயப்படுகிறார்களாம். நடிகர் அருள்நிதியின் உறவினர் ஒருவர் ஊரில் இருந்து வந்து அவருடைய பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாராம். அப்போது அருள் நிதி வீட்டில் இருந்து வெளியே வந்தாராம்.

இதனை கவனித்த அவருடைய உறவினர் அவருடைய குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாமா வாராரு பாரு என்று பயம் காட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவாராம். அதைப்போல, அருள்நிதி வீட்டில் இருக்கும்போது அவருடைய மனைவி அவரிடம் நான் இந்த இடத்திற்கு சென்று வருகிறேன் என்பது போல சொல்வாராம்.

அப்போது அருள்நிதி சரி சரி போயிட்டு வா என்று கூறுவாராம். பின் அவருடைய மனைவி அதனை எதற்கு படத்தில் வருவது போல இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டாராம். என்னுடைய வீட்டில் இப்படி கேட்பதால் என்னடா? படத்தில் அப்படி நடிப்பதால் நாம் அப்படியே நிஜ வாழ்க்கையிலும், மாறிவிட்டோமோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி தோணும் எனவும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார் அருள் நிதி.

இருந்தாலும் கூட, அப்படியான நல்ல கதைகள் கொண்ட த்ரில்லர் படங்கள் வந்தால் தொடர்ச்சியாக நடிப்பேன்…அடுத்ததாக குடும்ப கதை ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் நடித்து இருக்கும் டிமாண்டி காலாணி 2 வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அருள் நிதி பேசியுள்ளதை பார்த்த ரசிகர்கள் த்ரில்லர் படத்தில் நடிக்கிறது குத்தமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

16 minutes ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

35 minutes ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

47 minutes ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

2 hours ago

பிரதமர் மோடி முதல்… தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

2 hours ago

அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago