தமிழ் சினிமாவில், மிருகம் பாத்தின் மூலம் அறிமுகமான ஆதிக்கும், டார்லிங் படம் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் முக்கியமானவர்கள் மட்டும் அழைத்து இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தம் முடிந்த நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளபக்கங்களில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.03.2022… இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம்.” என பதிவிட்டிருந்தார்.
இவர்களது நிச்சியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. இந்த நிலையில், தற்போது நடிகர் ஆதி ட்வீட்டர் பக்கத்தில் நிச்சியத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆதி தற்போது லிங்குசாமி இயக்கும் “வாரியர்” படத்தில் வில்லனாகவும், ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கருடன் “பார்ட்னர்” என்ற நகைச்சுவை படத்திலும் நடிக்கிறார். நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…