மக்கள் சேவையில் கூட்டணி வைத்து kpy பாலாவுக்கு ‘காஞ்சனா 4’-ல் வாய்ப்பு.? அவர் சொன்னதென்ன?

Published by
கெளதம்

காஞ்சனா 4 : ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் kpy பாலாவுக்கு ‘காஞ்சனா’ 4 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கேள்வி எழுப்பிய நிலையில், நச்சென்று பதில் அளித்துள்ளார்.

கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற புகழை பெற்று கொண்டார். பின்னர், குக் வியஹ் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், தற்பொழுது வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

பாலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி சிரிப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இப்படி, பாலா ஒரு நடிகர் மட்டுமல்ல சமூக நலனில் அக்கறை கொண்டவர். தான் சம்பாதிக்கும் சிறு வருமானத்தில் கூட, பாதியை ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டு வருகிறார்.

அந்த வரிசையில், இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளார், சமீபத்தில் நல்ல குடிநீர் கிடைக்காமல் தவித்து வரும் கிராமத்திற்கு தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்தார் இவ்வாறு பல உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சொல்லப்போனால் இப்பொழுது, மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பெரும் உதவிகளை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில், ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலா, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, அவரிடம் காஞ்சனா நான்காம் பாகத்தில் நீங்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்? என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பாலா “காஞ்சனா 4 லாரன்ஸ் அண்ணா படம், அது அண்ணா தான் சொல்லணும், அதுல எனக்கு தெரியல சார். மேலும் படத்தில் பேயாக வாருவீர்களா என்று கேட்டதற்கு, முடிந்தால் தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து ‘காஞ்சனா 4’-ஐ முதல் ஆளாக பார்க்க வேண்டும்” என நக்கலாக பதில் கூறினார். மேலும், தான் செய்து உதவிகளை பலர் பல விதமாக பேசுகிறார்கள். அதை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை. நான் இதனை மேலும் சிறப்பாக செய்து கொண்டு இருப்பேன் என்றார். 

முன்னதாக, காஞ்சனா 4 படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் வதந்திகள். ராகவேந்திரா புரொடக்‌ஷன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள வாயிலாக தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
கெளதம்

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

6 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago