மக்கள் சேவையில் கூட்டணி வைத்து kpy பாலாவுக்கு ‘காஞ்சனா 4’-ல் வாய்ப்பு.? அவர் சொன்னதென்ன?

Published by
கெளதம்

காஞ்சனா 4 : ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் kpy பாலாவுக்கு ‘காஞ்சனா’ 4 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கேள்வி எழுப்பிய நிலையில், நச்சென்று பதில் அளித்துள்ளார்.

கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற புகழை பெற்று கொண்டார். பின்னர், குக் வியஹ் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், தற்பொழுது வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

பாலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி சிரிப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இப்படி, பாலா ஒரு நடிகர் மட்டுமல்ல சமூக நலனில் அக்கறை கொண்டவர். தான் சம்பாதிக்கும் சிறு வருமானத்தில் கூட, பாதியை ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டு வருகிறார்.

அந்த வரிசையில், இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளார், சமீபத்தில் நல்ல குடிநீர் கிடைக்காமல் தவித்து வரும் கிராமத்திற்கு தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்தார் இவ்வாறு பல உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சொல்லப்போனால் இப்பொழுது, மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பெரும் உதவிகளை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில், ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலா, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, அவரிடம் காஞ்சனா நான்காம் பாகத்தில் நீங்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்? என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பாலா “காஞ்சனா 4 லாரன்ஸ் அண்ணா படம், அது அண்ணா தான் சொல்லணும், அதுல எனக்கு தெரியல சார். மேலும் படத்தில் பேயாக வாருவீர்களா என்று கேட்டதற்கு, முடிந்தால் தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து ‘காஞ்சனா 4’-ஐ முதல் ஆளாக பார்க்க வேண்டும்” என நக்கலாக பதில் கூறினார். மேலும், தான் செய்து உதவிகளை பலர் பல விதமாக பேசுகிறார்கள். அதை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை. நான் இதனை மேலும் சிறப்பாக செய்து கொண்டு இருப்பேன் என்றார். 

முன்னதாக, காஞ்சனா 4 படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் வதந்திகள். ராகவேந்திரா புரொடக்‌ஷன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள வாயிலாக தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

15 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago