கிசு கிசு ஓவரா இருக்கு…காதல் போதும்! பிரியா பவானி சங்கர் எடுத்த முடிவு?

Published by
பால முருகன்

சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பொறுத்தவரை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் அதாவது காதலிப்பவர்கள் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக சொல்வது இல்லை. ஆனால், அந்த விஷயத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் வெளிப்படையாகவே தான் சிறிய வயதில் இருந்து ராஜ் என்பவரை காதலித்து வருகிறேன் என்பதை அறிவித்து விட்டார்.

தன்னுடைய காதலர் இவர் தான் என்று பிரியா பவானி சங்கர் கூறினாலும் கூட சமூக வலைத்தளங்களில் அவரை பற்றிய கிசு கிசுக்கள் வராமல் இருந்ததே இல்லை என்று கூட சொல்லலாம். அப்படி பரவும் கிசு கிசுக்களையும் பிரியா பவானி சங்கர் கவனித்து கொண்டு தான் இருக்கிறாராம். உதாரணமாக ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் அவருடன் காதல்? என்று எழுதி விடுகிறார்களாம்.

அதைபோல, அசோக் செல்வனுடன் பிரியா பவானி சங்கர் படங்களில் ஒன்றாக நடித்து இருக்கிறார். அது மட்டுமின்றி, பிரியா பவானி சங்கர் காதலித்து வரும் ராஜ் மற்றும் அசோக் செல்வன் இருவரும் நெருங்கிய நண்பர்களாம். ஒரு முறை அசோக் செல்வனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து பிரியா பவானி சங்கர் தெரிவித்த போது ராஜை கழட்டிவிட்டு அசோக் செல்வனுடன் பிரியா பவானி சங்கர் காதல் என்பது போல எழுதினார்களாம்.

அபப்டி எழுதிய அந்த செய்தியை பிரியா பவானி சங்கர், அவருடைய காதலர் ராஜ் மற்றும் நடிகர் அசோக் செல்வன் அதிர்ச்சியாக பார்த்து என்ன இப்படி எல்லாம் சொல்றாங்க என்பது போல பார்த்தார்களாம். இந்த தகவலை சமீபத்தில் டிமாண்டி காலனி 2 படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டபோது சென்னையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய அவர் ” என்னை பற்றிய வதந்தியான கிசு கிசுக்களை தயவு செய்து தவறாக விஷயங்களை எழுதாதீர்கள். நானும் என்னுடைய காதலர் ராஜ் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். இப்போது கொஞ்சம் சோம்பேறியாக இருப்பதன் காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறோம். கண்டிப்பாக, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளவேன்” எனவும் தெரிவித்துள்ளார். காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற முடிவெடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு  ரசிகர்கள்  வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago