RaghuthathaTeaser [File Image]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்களும் வரும் காட்சிகளும் பார்ப்பதற்கு மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஹிந்தி தெரியாது போயா என டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கயல்விழி அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…