அந்த மாதிரி நடிக்க ஆசை இருக்கு! மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

Published by
பால முருகன்

கீர்த்தி சுரேஷ் : சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆசை இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ஆரம்ப காலத்தை போல இல்லை என்றாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ஆகிய படங்களையும், ஹிந்தியில்  பேபி ஜான் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த சூழலில், தனக்கு அடுத்ததாக நடிக்க ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றியும் மகாநடி படம் பற்றியும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ‘மகாநடி’ படங்களில் நான் நடித்த கதாபாத்திரம் போல், அதிக பொறுப்புடன் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் தான் நான் அதிகமாக ஆர்வம் காட்டிகொண்டு வருகிறேன்.

பொதுவாக நாம் படங்களில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் சில அந்த நடிகர், நடிகையின் வாழ்க்கையில், தொழில்ரீதியாக அவர்களுக்கு இருக்கக்கூடிய கோணத்தை அப்படியே மாற்றிவிடும். அப்படியான படங்களில் நாம் நடித்தோம் என்றால், இனிமேல் தொடர்ச்சியாகவே நமக்கு அப்படியான கதாபாத்திரங்கள் தான் வரும்.

அதுபோன்ற கேரக்டர்கள் அவர்களை வழிநடத்திச் செல்லும். வித்தியாசமான, மிகவும் நல்ல கேரக்டர்களுக்கு இருக்கும் பலம் இதுதான். ‘மகாநடி’ படத்தில் நான் நடித்து முடித்த பிறகு அந்தக் கேரக்டர் எனக்குள் ஏற்படுத்தியிருந்த பாதிப்பை, இத்தனை வருடங்களான பிறகும் கூட என்னால் மறக்க முடியவில்லை. தொடர்ச்சியாகவே அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் முன்னுரிமை தருகிறேன்’ எனவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

43 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

46 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago