மாரி செல்வராஜ் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக உதயநிதி, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய வேடத்தில் வடிவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்ட கூட்டணி இணைய உள்ளது.
பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்து, கர்ணன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையாக கொண்டு ஒரு படம் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால், அந்த திரைப்படம் இப்போதைக்கு இல்லை, தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படம் இயக்க ரெடியாக்காவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
உதயநிதி – மாரி செல்வராஜ் கூட்டணி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ. ஆனால், அப்படத்தில் இணைந்த மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர் கேட்டு கண்டிப்பாக தமிழ் திரையுலகம் ஆச்சயர்யப்பட்டு தான் நிற்கும்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளாராம். வைகைப்புயல் வடிவேலு, காமெடியன் அல்லாத ஒரு குணச்சித்திர வேடத்தில் (கர்ணன் பட லால் போல ) நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமானாம். ஒளிப்பதிவாராக கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பணியாற்ற உள்ளாராம்.
விரைவில் இப்படத்தினை பற்றிய அதிகாரபூர்வ பிரமாண்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை PAN இந்திய திரைப்படமாக வெளியிடப்போவதாக அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…